செவ்வாய், மார்ச் 29, 2011

சப்த கன்னியர்


சப்த மாதர் எனும் சப்த கன்னியர்

ஆதி சக்தி தன்னிலிருந்து ஏழு சிறப்பான தன்னிகரற்ற தூய கன்னி சக்திகளை காலம் கருதி தோற்றுவித்தது.
பிராம்ஹி,மகேஸ்வரி,கௌமாரி,வைஷ்ணவி,வாராஹி,இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னியரை, அன்புடன் மனதால் நினைத்தாலே போதும்.
நம் அன்னையாக, உயிர் தரும் தோழியராக, அன்பும், அபயமும், அருளும் அற்புத தேவியர். இவர்களை தனி ஆலயத்தில் தரிசிக்க நாம் புதுவை செல்ல வேண்டும்.
பாண்டிச்சேரி எனும் புதுவை மாநிலத்தில் சன்யாசிகுப்பம் என்கிற கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சப்த மாதர் எனும் சப்த கன்னியர்க்கான ஆலயம் உள்ளது. அழகான கோவில். சத்தியமான அதிர்வுகள் கொண்ட அற்புத ஆலயம்.
கன்னிகள் ஏழு பேர் என்று ஒரு சுவாரஸ்யமான நாவலாக
இந்திரா சௌந்தரராஜன் எழுதி உள்ளார். அவசியம் படியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக