ஞாயிறு, மார்ச் 27, 2011

மேலகிரி ஐயப்பன்


மேலகிரி ஐயப்பன்
ஓசூரிலிருந்து சுமார் நாற்பது கி.மீ தொலைவு. தேன்கனிக் கோட்டை, பின் அய்யூர் செல்லும் பாதையில் சென்று நமிலேரி எனும் ஊரில் இடது புற சாலையில் சென்றால் அரை மணி நேரத்தில் கூசுவாடி மலை அடிவாரத்தை அடையலாம். அங்கிருந்து சுமார் இரண்டரை மணி நேர பயணத்தில் மலை உச்சியை அடையலாம். அற்புதமான மூங்கில் காடு. சற்று திகில் பயணம்தான். உடன் வந்த மலைவாசிகள் பத்து வார்த்தைகள் பேசினால் எட்டு வார்த்தை யானை பற்றி இருந்தது.
நிஜ சபரிமலை பார்க்காத திரு.கோபால் (நமிலேரி) முறையாக பூஜை செய்கிறார். சுற்றி உள்ள ஊர் மக்கள் மகர ஜோதி அன்று இந்த மலைக்கு இருமுடி தாங்கி வருவது ஓர் அனந்த அனுபவம்.
தொடர்புக்கு. திரு.கோபால் 9626294557

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக