
இயற்கையின் மடியில்.....
தப்கூலி
ஓசூரிலிருந்து 80 கிலோமீட்டர்.தளி சென்று அங்கிருந்து ஜவளகிரி சென்றோம். அழகான மலைப் பாதையில் ஆயிரக் கணக்கில் வண்ணத்துப் பூச்சிகளின் அணிவகுப்பை ரசித்தபடி தென்றல் காற்று நமைத் தழுவ கலகொண்டப்பள்ளி சென்று பின் ஹுன்ஸுன ஹள்ளி சென்றோம். அங்கே மட்டுமே கடைகள் உண்டென்பதால் நொறுக்கு தீனிகள் வாங்கிக் கொண்டு மஞ்சுகொண்டப் பள்ளி சென்றோம். 7கி.மீ மண் பாதை மட்டுமே,மிக கவனமாக செல்ல வேண்டிய மலைப் பாதையும் கூட.
ஒகேனக்கலில் கலக்கும் காவிரி, இது தமிழகப் பகுதிதான்.
அற்புதமான சூழலில் எவரின் இடையூறின்றி பயமின்றி காலத்தை மறந்து மூழ்கி மிதந்து குளித்து விளையாடலாம். குடும்பத்துடனும் செல்லலாம். அமானுஷ்யமான கட்டிடத்தை அதன் கதையை அங்கு இருக்கும் சிவன் காளையர் கோவில் நிர்வாகிகள் சொல்ல கேட்டு பார்த்து பிரமித்தோம். நேரில் சென்று பார்த்தால் மட்டுமே புரியும்.
ஒரு வேண்டுகோள் ...அசுத்தப்படாத காவிரி, நாமும் அப்படி நடந்து கொள்வோம்.
ஒரு எச்சரிக்கை?! யானைகள் நடமாடும் பகுதி என்பதால் மாலை 3 மணிக்கே அங்கிருந்து விடை பெறுங்கள்...
Crocodile and water current risk level is very high in Debaguli area.
பதிலளிநீக்கு