
திருக்கடவூர் அபிராமி அம்மனை தரிசிக்கையில் உள்ளே ஒரு வினா ஓடியது. அதுவும் அவள் குறித்தே. அபிராமி பட்டர் நிறைந்த அமாவாசையன்று பௌர்ணமி நிலா தோன்றும் என சொன்னதும், அபிராமியும் முழு நிலவை வானில் தோன்றச் செய்தாள் என்ற கதையும் நினைவுக்கு வந்தது. எப்போதும் இயற்கை எனும் இறை எவருக்கும் எந்நிலையிலும் இயற்கைக்கு மாறாக அதுவும் தன் இருப்பை நிரூபிக்க அற்புதம் நிகழ்துவதில்லையே, எனவே அவளையே கேட்போம் அன்று அவள் முன்பமர்ந்து தியானிக்கையில் உள்ளே ஓர் வாக்கியம் ஓடியது. பௌர்ணமி என்றால் முழுமதி எனப் பொருள் கொள்.முழு மதி அதாவது பூரண அறிவு அபிராமி பட்டருக்குள் பூரித்ததும் அவரின் இருப்பும் தன்மையும் எதிரிலிருப்போர் உணர்ந்து அவரை முழுதாய் மதித்தனர். முழுமதி பூத்தது அவரில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக