செவ்வாய், மார்ச் 29, 2011

சப்த கன்னியர்


சப்த மாதர் எனும் சப்த கன்னியர்

ஆதி சக்தி தன்னிலிருந்து ஏழு சிறப்பான தன்னிகரற்ற தூய கன்னி சக்திகளை காலம் கருதி தோற்றுவித்தது.
பிராம்ஹி,மகேஸ்வரி,கௌமாரி,வைஷ்ணவி,வாராஹி,இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னியரை, அன்புடன் மனதால் நினைத்தாலே போதும்.
நம் அன்னையாக, உயிர் தரும் தோழியராக, அன்பும், அபயமும், அருளும் அற்புத தேவியர். இவர்களை தனி ஆலயத்தில் தரிசிக்க நாம் புதுவை செல்ல வேண்டும்.
பாண்டிச்சேரி எனும் புதுவை மாநிலத்தில் சன்யாசிகுப்பம் என்கிற கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சப்த மாதர் எனும் சப்த கன்னியர்க்கான ஆலயம் உள்ளது. அழகான கோவில். சத்தியமான அதிர்வுகள் கொண்ட அற்புத ஆலயம்.
கன்னிகள் ஏழு பேர் என்று ஒரு சுவாரஸ்யமான நாவலாக
இந்திரா சௌந்தரராஜன் எழுதி உள்ளார். அவசியம் படியுங்கள்.

இயற்கையின் மடியில்.....


இயற்கையின் மடியில்.....
தப்கூலி
ஓசூரிலிருந்து 80 கிலோமீட்டர்.தளி சென்று அங்கிருந்து ஜவளகிரி சென்றோம். அழகான மலைப் பாதையில் ஆயிரக் கணக்கில் வண்ணத்துப் பூச்சிகளின் அணிவகுப்பை ரசித்தபடி தென்றல் காற்று நமைத் தழுவ கலகொண்டப்பள்ளி சென்று பின் ஹுன்ஸுன ஹள்ளி சென்றோம். அங்கே மட்டுமே கடைகள் உண்டென்பதால் நொறுக்கு தீனிகள் வாங்கிக் கொண்டு மஞ்சுகொண்டப் பள்ளி சென்றோம். 7கி.மீ மண் பாதை மட்டுமே,மிக கவனமாக செல்ல வேண்டிய மலைப் பாதையும் கூட.
ஒகேனக்கலில் கலக்கும் காவிரி, இது தமிழகப் பகுதிதான்.

அற்புதமான சூழலில் எவரின் இடையூறின்றி பயமின்றி காலத்தை மறந்து மூழ்கி மிதந்து குளித்து விளையாடலாம். குடும்பத்துடனும் செல்லலாம். அமானுஷ்யமான கட்டிடத்தை அதன் கதையை அங்கு இருக்கும் சிவன் காளையர் கோவில் நிர்வாகிகள் சொல்ல கேட்டு பார்த்து பிரமித்தோம். நேரில் சென்று பார்த்தால் மட்டுமே புரியும்.
ஒரு வேண்டுகோள் ...அசுத்தப்படாத காவிரி, நாமும் அப்படி நடந்து கொள்வோம்.
ஒரு எச்சரிக்கை?! யானைகள் நடமாடும் பகுதி என்பதால் மாலை 3 மணிக்கே அங்கிருந்து விடை பெறுங்கள்...

பஞ்சப்பள்ளி அணை



பஞ்சப்பள்ளி அணை
ஓசூரிலிருந்து 45 கிமீ தூரம்தான். தேன்கனிக்கோட்டை சென்று , அங்கிருந்து ஓர் ஒற்றை தார் சாலையில் சுமார் ஒரு மணி நேர பயணத்தில் அணையை அடையலாம். மலைகள் சூழ மிக அழகாய் உள்ளது.செல்லும் வழியில் சுமார் இரண்டு கிமீ முன்பே அணையின் நீர் இருப்பை பள்ளத்தாக்கில் ஓடும் ஆறு தெரிவிக்கிறது. பூங்கா போன்றவை இல்லை. எனினும் குளிர்ச்சியான மாந்தோப்பும், தெளிந்த நீரோடும் நீண்ட கால்வாயும் போதும் இளைப்பாற.

ஞாயிறு, மார்ச் 27, 2011

மேலகிரி ஐயப்பன்


மேலகிரி ஐயப்பன்
ஓசூரிலிருந்து சுமார் நாற்பது கி.மீ தொலைவு. தேன்கனிக் கோட்டை, பின் அய்யூர் செல்லும் பாதையில் சென்று நமிலேரி எனும் ஊரில் இடது புற சாலையில் சென்றால் அரை மணி நேரத்தில் கூசுவாடி மலை அடிவாரத்தை அடையலாம். அங்கிருந்து சுமார் இரண்டரை மணி நேர பயணத்தில் மலை உச்சியை அடையலாம். அற்புதமான மூங்கில் காடு. சற்று திகில் பயணம்தான். உடன் வந்த மலைவாசிகள் பத்து வார்த்தைகள் பேசினால் எட்டு வார்த்தை யானை பற்றி இருந்தது.
நிஜ சபரிமலை பார்க்காத திரு.கோபால் (நமிலேரி) முறையாக பூஜை செய்கிறார். சுற்றி உள்ள ஊர் மக்கள் மகர ஜோதி அன்று இந்த மலைக்கு இருமுடி தாங்கி வருவது ஓர் அனந்த அனுபவம்.
தொடர்புக்கு. திரு.கோபால் 9626294557

நூரோந்து சாமிமலை


நூரோந்து சாமிமலை
ஓசூரில் இருந்து அஞ்செட்டி சென்று உரிகம் சாலையில் தக்கட்டி எனுமிடத்தில் பிரிந்து மலை பாதையில் சென்றால் நூரோந்து சாமிமலை செல்லலாம். சிறிய குகை கோவில். இங்கு உள்ள சிவன் ஒரு சித்தரால் வழிபடபட்டதாகும்.
இங்குதான் அந்த அதிசயத்தை நம் கண்களால் பார்த்து பரவசமடைந்தோம். விளக்கு ஏற்ற எண்ணைக்கு பதில் வெறும் இளநீர் தண்ணீர் உபயோகப் படுத்தி தீபம் ஏற்ற ஆச்சர்யமாக இருந்தது.
நீங்களும் வாங்க. அற்புதைதைப் பாருங்க.

ஓசூர்


பெட்டமுகிலாலம்.. எளிமையின் அழகு!
கொஞ்சம் தேநீர் நிறைய வா(வ)னம்
ஒசூரின் ஏற்காடு. தேன்கனிகோட்டையிலிருந்து முப்பது கி.மீ தூரம். அய்யூர் வன பகுதியில் உள்ளது சாமி ஏரி. அழகான ஏரி. அதிர்ஷ்டம் இருந்தால் யானைகள் நீர் குடிப்பதை பார்க்கலாம். இரு புறமும் மூங்கில் வனம்.
வெறுமனே இயற்கையை அதன் பிரமாண்டத்திற்கு ரசிப்பவர்களா, அவசியம் செல்லுங்கள் பெட்டமுகிளலம்.