
பாலகுமாரன்
தமிழ் வாசகர்களால் மிக நேசிக்கப்படும் பாலகுமாரன், காதல், சமூக கதைகள், கட்டுரைகள் தாண்டி ஆன்மிகம் எனும் பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்கையில், அவர் படைத்த சில ஆன்மிக கதைகள் எல்லோராலும் பெரிதும் விரும்பப்படுகின்றன. அவற்றுள் எனக்கு மிகப் பிடித்த சில படைப்புகளை இங்கு தருகிறேன். படியுங்கள். பகிருங்கள்.
காதற்பெருமான்- திருவண்ணாமலை ஞானி அருணகிரி நாதரின் வாழ்வை மிக அழகாய் சொல்லும் புதினம்.
பேய்க்கரும்பு –பட்டினத்தார் எனும் சித்தரின் வரலாற்றை அறிய அவசியம் படிக்க வேண்டும்.
தோழன்- புன்னை நல்லூர் மாரியம்மன் எனும் மகா சக்தியின் திரு உருவை புற்று மண் கொண்டு உருவாக்கி பல அதிசயம் நிகழ்த்திய மகான் சதாசிவ பரப் பிரமேந்திரர் சரிதம்.
கடவுள் வீடு- தருமரின் பிறப்பின் சூட்சுமத்தை மகாபாரதப் பின்னணியில் விளக்கும் விறுவிறுப்பான நீள் கதை.
என் கண்மணி தாமரை- அபிராமி அந்தாதி இயற்றி பக்தியின், சரணாகதியின், மகத்துவத்தை உலகறியச் செய்த பக்தன், முக்தன் அபிராமி பட்டர் கதை.
புருஷவதம்- பழையனூர் நீலி கதை. புகழ் போதைக்கு அடிமையாகி அதற்கு விலையாக தன் சொந்த மனைவியின் கையால் மரணம் அடையும் மனிதனின் அவலத்தை ஒவ்வொரு வரியிலும், திகிலும், திருப்பமும் கலந்து சொல்லும் சுவாரஸ்யமான நெடுங்கதை.
பெரிய புராண கதைகள்- அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சிலரின் (உதாரணமாக காரைக்கால் அம்மையார், கண்ணப்ப நாயனார், மெய்ப்பொருள் நாயனார் மற்றும் இன்ன பிறர்) வாழ்வியல் சம்பவங்களை விளக்கி, எப்படி அவர்கள் இறை எனும் சிவன் அருள் பெற்று, நாயன் மாராய் உயர்ந்தனர் என்பதை, பரவசத்துடன் கூறும் வார்த்தைப் புதையல்.
இன்னும் சில நாவல்கள் இவ்வரிசையில் உள்ளன. பிறகு பகிர்கிறேன்.