வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011
புதிய அகம்... புத்த(அ)கம்
"லோகோ பின்ன ருசி:இந்த உலகம் பலவிதமான ரசனைகளால் ஆனது. புத்தக வாசிப்பும் அப்படியே. அவ்வகையில் பொழுது போக்க புரட்டிய புத்தகங்களும் உண்டு.என்னைப் புரட்டிய புத்தகங்களுமுண்டு.மொழி ஆளுமை,அனுபவம்,ஞானம் கொண்டு சமைக்கப்பெற்ற புத்தக பதார்த்தத்தை, தேடல் ருசி கொண்டோருக்குப் பரிமாருகிறேன்.
ஞானம் பிறந்த கதை...
பட்டினத்தாரின் வாழ்வை சுய சரித நடையில் அனுபவ ஞானி கண்ணதாசன் எழுதியது. கனத்த வாசிப்பனுபவம் தருவது.
ஞானபூமி...
பாண்டிச்சேரி என்றறியப்படும் புதுவை,எண்ணற்ற மெய் ஞானியரின் மெய்யை(ஜீவ சமாதி)தன்னுள் கொண்ட ஆன்ம நிலம்.எந்த சித்தர், எங்கு ஜீவ சமாதியானார் எனும் அரிய தகவல் தரும் மெய் ஏடு.
ஒரு யோகியின் சுயசரிதம்...
மகாவதார் பாபாஜி,க்ரியா யோகம், மற்றும் பல்வேறு ஞானியர் குறித்த அரிய தகவல்கள் உள்ளடக்கிய ஞானக் களஞ்சியம்.
மிர்தாதின் புத்தகம்...
மிகைல் நைமி வழி வந்த புதிர் நெசவு. விழி எனும் நாவிற்கு தீராத் தா(க்)கத்தை ஏற்படுத்தும்.
ஞானகுரு...
விகடன் வெளியீடு. ஞானத்தையும்,குருவையும் பாசாங்கற்ற மந்திரச் சொற்களால் எஸ்.முருகேசன் நமக்கு அறிமுகம் செய்கிறார்.
அன்பெனும் ஓடையிலே...
ஓஷோ எனும் பிரபஞ்சக் கவிதையின் சில வரிகள்...நமக்காக...
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்...
ஞானியரின் ஞானி, ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர். ..ம- என்ற நேரடிச் சீடரின் பேறு பெற்ற கணங்கள்...பரவசப் பதிவுகள். படிக்கையில் வீடு காண்போம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)